எனக்கு பிடித்தது உங்களுக்காக.....

இணையத்தில் வந்த அட்டகாசமான “”பின்னூட்டங்களின்”” தொகுப்புகள்

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரைக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது

சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்- துர்கா தம்பதியினரின் மகள் செந்தாமரைக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஸ்டாலின் குடும்பம் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். உதயநிதி- கிருத்திகா தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மகள் செந்தாமரை- சபரீஷ் தம்பதிக்கு இன்று இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது.

காலை ஏழரை மணியளவில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் ஸ்டாலின் தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த மு.க.அழகிரி, அவருடைய மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி அழகிரி, கனிமொழி, ராஜாத்தி அம்மாள், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், முரசொலி செல்வம், மு.க.தமிழரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஸ்டாலின் மற்றும் செந்தாமரை தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்

பதிவு செய்தவர்: தி மு க தொண்டன்பதிவு செய்தது: 05 May 2010 5:23 pm

எங்களுக்கு விடிவு EPPA VARUM......EN PILLAIKKUM வராதா.................

நன்றி...
http://thatstamil.oneindia.in/news/2010/05/05/stalin-dmk-stenthamarai-twins.html





ஒரு படத்துக்கு ஒரு புது ஹீரோயின் கேக்கறாங்க! - குஷ்பு

இப்போதெல்லாம் படத்துக்குப் படம் புதுப் புது ஹீரோயின்கள் வேண்டும் என்கிறார்கள் ஹீரோக்கள். முன்பு அப்படியில்லை. நான் பல வருடங்கள் ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துள்ளேன், என்கிறார் நடிகை குஷ்பு.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

"தமிழ் திரைப்படங்களில் தற்போது ஒரு நடிகை நிலைத்து நிற்பது கடினமாக உள்ளது. எனது காலத்தில் நிறைய ஹீரோக்களுடன் நான் தொடர்ந்து பல ஆண்டுகள் நடித்தேன்.

ஆனால் இப்போதைய ஹீரோக்கள் ஒரு படத்துக்கு ஒரு கதாநாயகி தங்களுடன் நடிப்பதை விரும்புகின்றனர். அடுத்த படத்தில் அதே நாயகியை நடிக்க வைப்பதில்லை. சில ஹீரோக்கள் 3 சீன்களுக்கு மட்டுமே ஹீரோயின்களை பயன்படுத்துவதும் உள்ளது..." என்றார்.

சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற குஷ்பு, இயக்குநர்கள் வட இந்திய நடிகைகளை தேடிப் போகாமல் தமிழ்ப் பெண்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு விளக்கமளித்த குஷ்பு, "சினிமா வில் திறமையும், உழைப்பும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும். கடந்த காலங்களில் சிம்ரன், ஜோதிகா போன்றோர் திறமையால் தான் நிலைத்து நின்றனர். அவர்களுக்கு பின் திரிஷா , அசின், நயன்தாரா போன்றோர் செல்வாக்கு பெற்றுள்ளனர். புதுமுகங்களான அபிநயா, அஞ்சலி போன்றோரும் கவர்ந்துள்ளனர்.

தமிழில் கவர்ச்சியான கதாநாயகிகள்தான் ஜெயிக்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் கவர்ச்சிக்கு தயங்குவதால் இயக்குனர்கள் வடக்கே நடிகைகளை தேடி போகிறார்கள்... இதை தமிழ் நடிகைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.." என்றார்

பதிவு செய்தவர்: கதாநாயகன்பதிவு செய்தது: 13 May 2010 2:32 pm

ஜாங்கிரி புதுசா இருந்தா தானே ஜீரா ஜிவ்வுன்னு ஊறும்.



நன்றி........http://thatstamil.oneindia.in/movies/heroines/2010/05/13-tamil-actress-
kushboo-heroes.html